எந்த தேர்ந்தெடுப்பின் மூலம்
நீ மரணத்தை நிகழ்த்துகிறாய்?
தீயவர்கள் கண்டிப்பாக
மாரடைப்பாலோ புற்றுநோயினாலோ
இறந்தே தீருவார்கள்
என்ற நியதி இருந்தால்
நிச்சயமாக உலகம்
நல்லவர்களால் மட்டுமே
நிரம்பியிருக்கும் அல்லவா?
ஆனால் நீயோ
நல்லவர்களையும் கொன்றுவிடுகிறாய்.
அகாலமாய் மரிப்பவர்களின் தகுதிகள்
என்னவாக இருக்கும்
உன் குறிப்பேட்டில்?
புகையும் மதுவுமாய்
அறுபது வயதையும் தாண்டிய நடிகன்
உயிருடன் இருக்கிறான்
அப்பாவி குழந்தைகளை
அப்பாவி குழந்தைகளை
காவு கொள்கிறாய்.
போர்களை விரும்பும்
தலைவர்களை விட்டுவிடுகிறாய்
ஒரு அன்பான அப்பாவை
கொன்று விடுகிறாய்.
எப்படி தீர்மானிக்கிறாய்
ஒருவன் முடிவை?
ஒவ்வொருவரின் முடிவும்
அந்த உயிருக்கு
நீ தரும்
இன்னொரு நல்ல வாழ்க்கைக்கான
தொடக்கம் என
என்னை நான்
சமாதானம் செய்துக்கொண்டாலும்
ஒருவேளை நீ
முஸ்லிமாகவோ கிருஸ்துவனாகவோ
அல்லது மதமற்றவனாகவோ இருந்தால்
மரணம் என்னவாக இருக்கும்,
உன் அகராதியில்?
உன் அகராதியில்?
அதுதான் இறுதி,
அதற்கு அப்பால்
ஒன்றேமே இல்லை
என்பதுதான்
மரணத்தையும் மிஞ்சிய
துக்கத்தைத் தருகிறது.
காலகாலமாக
இறந்த எல்லோருக்காவும்
உன்னை வேண்டுகிறேன்
அவர்களுக்கு இன்னொரு
பிறவிக் கொடு.
நிம்மதியான இன்பமான
வாழ்க்கையை கொடு.
இந்த முறை
அவர்கள் மரண நாளை
அவர்களே தீர்மானிக்கட்டும்,
சந்தோஷமாகவே.
அதுவரை அவர்களுக்கு
வரங்களை மட்டுமே
தந்துக் கொண்டு இரு
என்றென்றும்.


